Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது..நீதிபதி தண்டபாணி

Mahendran
திங்கள், 5 பிப்ரவரி 2024 (15:28 IST)
தஞ்சாவூரில் ஆஞ்சநேயர் கோயில் முன்பு மது அருந்தியதை தட்டிக்கேட்ட பெண் காவலரிடம், உள்ளாடைகளை கழற்றிக் காட்டி தகராறு செய்த வழக்கில் கைதான இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரனின் ஜாமின் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மீண்டும் தள்ளுபடி செய்தது 
 
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி தண்டபாணி, ‘இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு மோசமாகிவிட்டது  என்று தெரிவித்தார்.
 
முன்னதாக தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் கடந்த மாதம் 7-ம் தேதி இரவு பெண் காவலர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோஒது, ரயில்வே காவல் துறையினர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பு 3 பேர் அமர்ந்து மது அருந்தியதை கண்டித்தனர். 
 
கோயில் முன்பு ஏன் மது அறுந்துகிறீர்கள்? என பெண் காவலர் கேட்டதற்கு அவர்கள் தங்கள் உள்ளாடைகளை கழட்டி,  போலீசிடம் தகாத முறையில் நடந்ததாகவும், இதுகுறித்து பெண் காவலர் கொடுத்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments