Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட புத்தகத்தில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்றியவர்கள் கைது.

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (21:22 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியின் புகைப்படம் பாடப்புத்தகத்தில் இருக்க கூடாது என்பதை வலியுறுத்திய மக்கள் அதிகார அமைப்பினர் திருச்சி உள்ள மரக்கடை பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற மாணவர்களிடம் இருந்து புத்தகத்தை வாங்கி அதில் இருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு பதிலாக திருவள்ளுவர் படத்தை ஒட்டினர்



இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜெயலலிதா படத்தை மறைப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் குற்றவாளி ஒருவரின் புகைப்படம் புத்தகத்தில் இருந்தால் மாணவர்களுக்கு தவறான பாடம் கற்பிக்கப்படுவதாக மாறிவிடும் என்று அவர்கள் போலிசார்களுடன் வாதம் செய்தனர்.

இதனையடுத்து மக்கள் அதிகார அமைப்பின் உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!

14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: பகுஜன் சமாஜ் பொது செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்

ஒரு சவரன் ரூ.56,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments