Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலிரவு அறையில் தூக்கில் தொங்கிய மணமகன்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:40 IST)
சென்னை அருகே திருமணம் ஆன அன்றே முதலிரவு அறையில் மணமகன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பெலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மற்றும் நந்தினி ஆகியவர்களுக்கு கடந்த 8 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து மணமக்கள் இருவரும் மணமகள் இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். 8 ஆம் தேதி இரவு மணமகள் இல்லத்தில் இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்ப்ட்டுள்ளது.

இந்நிலையில் 9 ஆம் தேதி காலை மணமகள் அந்த அறையில் இருந்து அதிர்ச்சியோடு அலறி அடித்து வெளியே வந்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அறைக்குள் சென்ற போது மணமகன் கார்த்திகேயன் தூக்கில் தொங்கி சடலமாக காணப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வந்து உடலை மீட்டனர். பின்னர் மணமகளிடம் விசாரித்ததில் முதலிரவு அறையில் கார்த்திகேயன் பதற்றமாக இருந்ததாகவும், அவரை சமாதானப்படுத்தி வைத்துவிட்டு தான் தூங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments