Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில் கைதான நபர் !

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (10:36 IST)
திருப்பூரில் 14 வயது சிறுமியைக் கட்டிட வேலைக்கு அழைத்து சென்று சீரழித்த நபரைப் போலிஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமைந்துள்ள பொட்டிக்காம்பாளையம் வசித்து வருபவர் சுப்ரமணி எனும் கட்டிட தொழிலாளி. இவர் வசிக்கும் பகுதிக்கு அருகே தாய் ஒருவர் தனது 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அந்த தாயுடனும் மகளுடனும் நம்பிக்கைக்கு உரியவராக அவர்களிடம் பழகி வந்துள்ளார் சுப்ரமணி.

இந்நிலையில் அந்த தாயிடம் கட்டிடத் தொழிலுக்கு அவர் மகளை அனுப்பி வைத்தால் தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாக சொல்லியுள்ளார். அவரை நம்பிய அந்த தாயும் குடும்பத்துக்குக் கொஞ்சம் அதிக வருமானம் வரும் என்ற ஆசையில் தனது மகளைக் கட்டிட வேலைக்கு அனுப்பியுள்ளார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் பயந்து போன அவர் போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமியைத் தேடிய போலிஸார் அவரை திருப்பூர் பேருந்து நிலையத்தில் கண்டுபிடித்து விசாரணை நடத்தியதை அடுத்து சுப்ரமணி தன்னைப் பாலியல் வல்லுறவு கொண்டதாக சொல்லியுள்ளார். இதையடுத்து சுப்ரமணியைத் தேடி கண்டுபிடித்து அவரைப் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

அடுத்த கட்டுரையில்