Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அலுவலகத்திற்கு தீ வைப்பு; பாதுகாப்புக்கு போலீஸ் குவிப்பு

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (11:14 IST)
மன்னார்குடி அதிமுக அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


 

 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தின் முன் உள்ள கீற்று கொட்டகைக்கு அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதிமுக அலுவலகத்தில் தீப்பற்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 
 
இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ஆனால் கீற்று கொட்டகை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகிகள் அதிமுக அலுவலகத்தை பார்வையிட்ட பின் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
 
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதால் மன்னார்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் சென்னை சென்றுவிட்டனர். அதிமுக அலுவலகத்திற்கு தீவைக்கப்பட்டதால் மன்னார்குடியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments