Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆரணியில் போட்டியில்லை.. திடீரென தொகுதி மாறிய மன்சூர் அலிகான்..!

ஆரணியில் போட்டியில்லை.. திடீரென தொகுதி மாறிய மன்சூர் அலிகான்..!

Siva

, வியாழன், 7 மார்ச் 2024 (07:30 IST)
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் வேலூரில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார்.

அதன் பிறகு திடீரென ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது ஆரணியில் போட்டியிடப் போவதில்லை என்றும் மீண்டும் வேலூரில் தான் போட்டியிட போவதாகவும் மன்சூர் அலிகான் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இருந்தபோதிலும் ஐந்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஓரிரு நாளில் அறிவித்து தொகுதியில் சென்று மக்களை சந்தித்து குறைகளை அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது;’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆரணி தொகுதியில் மன்சூர் அலிகானுக்கு தெரிந்த அரசியல் கட்சி பிரபலம் ஒருவர் வேறு கட்சியிலிருந்து போட்டியிடுவதால் தான் அவர் அந்த தொகுதியில் போட்டியிடவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவளம் - திநகர்.. கோவளம் - சைதாப்பேட்டை.. 2 புதிய பேருந்து சேவைகள் அறிமுகம்!




X
X
X
X