Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாசாணியம்மன் திருக்கோயிலின் பூக்குழி இறங்கும் திருவிழா

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (21:29 IST)
மாசாணியம்மன் திருக்கோயிலின் பூக்குழி இறங்கும் திருவிழா

கரூர் அருகே சூடாமணி மாசாணியம்மன் திருக்கோயிலின் 24 ம் ஆண்டு பூக்குழி (குண்டம்) இறங்கும் திருவிழா – 700 க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கரூர் டூ சின்னதாராபுரம் சாலையில் உள்ள சூடாமணி, அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோயிலின் 24 ஆம் ஆண்டு பூக்குழி (குண்டம்) இறங்கும் திருவிழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுற்றியுள்ள சூடாமணி, கதர்மங்கலம், எல்லமேடு உள்ளிட்ட சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த பக்தர்கள் ஊர்வலமாக அலகு குத்தியும், அக்னி சட்டிகளையும், தீர்த்தகுடங்கள், பால்குடங்கள் கையில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 
+
பின்னர் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குண்டத்தில் கோயிலின் பூசாரியார் தனது உடலினை சவுக்கால் அடித்து கொண்டு மூன்று முறை பூக்குழியினை சுற்றி வந்து பின்னர் அவர் முதலில் பூக்குழி இறங்கினார். பின்னர் பக்தர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இறங்கி நேர்த்திகடன்களை நிறைவேற்றினார்கள். முன்னதாக ஆலயத்தின் உள்ளே அலங்கரிக்கபட்ட மாசானியம்மன் அம்மனுக்கு சிறப்பு விஷேச பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை ஸ்ரீ மாசாணி அம்மன் அறக்கட்டளை மற்றும் சூடாமணி, எல்லமேடு, கதர்மங்கலம் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments