Publish Date: Wed, 01 Dec 2021 (09:27 IST)
Updated Date: Wed, 01 Dec 2021 (09:32 IST)
அண்மைய நாட்களாக பொதுமக்கள் பெட்ரோல் விலை உயர்வை சந்தித்த நிலையில் பல்வேறு பொருட்களின் விலையும், லாரி உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களின் வாடகையும் உயர்ந்துள்ளது. இதனால் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதையடுத்து மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வருதல், லாரி வாடகையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இதற்கான தீர்வு கேட்டு வந்தனர். இந்நிலையில் 1 ரூபாய்க்கு விற்கப்பட்ட தீப்பெட்டி இன்று முதல் ரூ. 2க்கு விற்பனை செய்யப்படும் என தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.