Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் சாதி பெயரை கேட்கவில்லை..! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (15:37 IST)
தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் சாதி பெயர் கேட்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் பல செயல்பட்டு வரும் நிலையில் அனைத்திலும் பயிற்று மொழியாக தமிழ் உள்ளது. சில பள்ளிகளில் ஆங்கிலம், தமிழ் என இருவகை பயிற்று மொழி வகுப்புகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக 54 அரசு பள்ளிகள் தமிழ் பயிற்று மொழி வகுப்புகளே இல்லை என தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் “சில அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி வகுப்பு இல்லை என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகள் சாதி பெயர் கேட்கப்படுவதாக கூறப்படுவது குறித்து பேசிய அவர் “பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதாக வெளியான தகவல் தவறானது. பள்ளிகளில் எம்.பி.சி, பி.சி. என்ற பிரிவுகளை தான் பதிவு செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments