Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் டிஸ்மிஸ்: அமைச்சர் எச்சரிக்கை

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் டிஸ்மிஸ்: அமைச்சர் எச்சரிக்கை
, திங்கள், 26 ஜூன் 2023 (12:01 IST)
டாஸ்மாக்கில் கூடுதலாக பத்து ரூபாய் ஒரு பாட்டிலுக்கு விற்கப்படுவதாக கடந்த சில மாதங்களாக புகார் எழுந்த நிலையில் தற்போது டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு பெற்றால் பணிநீக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார். 
 
டாஸ்மார்க் மது கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்றால் பணி நீக்கம் செய்யப்படும் என்று கூறிய அமைச்சர் முத்துசாமி மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்தால் காவல்துறையில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 
 
டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் நடத்திய ஆலோசனையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் இது குறித்து எச்சரிக்கையை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே இனிவரும் நாட்களில் டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்வெட்டு குறித்து ட்விட் போட்ட பிசி ஸ்ரீராம்.. உடனடியாக பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு..!