Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களை தூண்டிவிட்டு ஆதாயம் தேடுகிறார்கள்! – அமைச்சர் பாய்ச்சல்!

Webdunia
வியாழன், 7 மே 2020 (15:16 IST)
மதுக்கடைகள் திறக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் 42 நாட்கள் கழித்து சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது “மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் பலர் மது வாங்க வெளிமாநிலங்களுக்கு செல்லும் அபாயம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு என்ன நன்மை செய்தாலும் போராட்டங்கள் நடத்தி மக்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடவே எதிர்க்கட்சிகள் முயல்கின்றன” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments