Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா உறுதி

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (17:54 IST)
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே. எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் இதனை உறுதி செய்தார் 
 
ஆனால் அமைச்சர் அன்பழகன் தரப்பில் இருந்து இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு வெறும் காய்ச்சல் மட்டும்தான் என்றும் அவருக்கு கொரனோ தொற்று இல்லை என்றும் அவர் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்த மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் ’உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு இரண்டாவது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் சோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் அன்பழகன் அவர்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் அறிவித்துள்ளது 
 
மியாட் மருத்துவமனையின் இந்த அறிவிப்பு காரணமாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

நெற்றியில் பொட்டு இல்லை.! விஜய்யின் புகைப்படம் மாற்றம்..! இதுதான் காரணமா.?

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments