Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்ப என்ன அவசரம்.. பொங்கல் முடிஞ்சு ஸ்கூல் திறக்கலாம்! – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (12:02 IST)
தமிழகத்தில் நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பள்ளிகளை திறக்க வேண்டாம் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் நவம்பர் 16 முதலாக பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 16 பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில், பள்ளிகளை தற்போது திறக்கக்கூடாது என ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அவசர கோலத்தில் முடிவெடுத்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் பாதுகாப்பு, விடுதி வசதி, உணவு போன்றவற்றிற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை பரவுவதாக கூறப்படும் நிலையை ஆய்வு செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தற்போது பருவமழை, சுற்றுசூழல் மாறுபாடுகள் ஆகியவை ஏற்படுவதால் இந்த சமயத்தில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும், ஜனவரியில் பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து கலந்தாலோசிக்கலாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments