Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”மதநல்லிணக்கத்துடன் முன்னேறுங்கள்”..ஸ்டாலின் கருத்து

Arun Prasath
சனி, 9 நவம்பர் 2019 (16:06 IST)
அயோத்தி தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் மக்கள் மதநல்லிணக்கத்துடனும் சமமான சிந்தனையுடனும் முன்னேறுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, மசூதி கட்டுவதற்கு இஸ்லாமியர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என உத்திர பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பல அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ”அயோத்தி தீர்ப்பை விருப்பு வெருப்புக்கு உட்படுத்தாமல், அனைவரும் சமமான சிந்தனையுடனும் மதநல்லிணக்கத்துடனும் முன்னெடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் மத நல்லிணக்கத்தோடு தீர்ப்பு வழங்கியுள்ளதாக பல அரசியல் தலைவர்கள் கூறிவருகிற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மத நல்லிணக்கத்துடன் முன்னேறுங்கள் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments