Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏக்களின் உரிமையை பறிப்பது சரியல்ல! – முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (10:28 IST)
எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணத்தை எடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி கோரி வருகிறது. இந்நிலையில் எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண பணிகளுக்காக எடுத்துக் கொள்ள அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு பணம் எடுத்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது. எம்.எல்.ஏக்களின் தார்மீக உரிமையை அரசு பறிப்பது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கை நீட்டிப்பதை குறித்து உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments