Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா வெளியேறியவுடன் தப்ப முயன்ற எம்.எல்.ஏ.க்கள்

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2017 (17:08 IST)
கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்து சசிகலா கார் வெளியேறியவுடன் தப்ப முயன்ற இரண்டு எம்.எல்.ஏ.க்கள், செக்யூரிட்டி கும்பலால் குண்டுக்கட்டாக மீண்டும் ரிசார்ட் உள்ளே தூக்கிச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலா பெங்களூர் செல்ல கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து வெளியேறிய போது, இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஓடி வந்து வாழ்க கோஷம் கூட்டத்தில் கலந்துள்ளனர்.
 
இந்த இருவரையும் கண்ட சசிகலா தரப்பு செக்யூரிட்டி கும்பல் அவர்களை குண்டுக்கட்டாக மீண்டும் விடுதிக்குள் தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர். தற்போது இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது. ஒருபக்கம் எம்.எல்.ஏ.க்கள் நாங்கள் சுய விருப்பத்தோடு தன் இங்கு தங்கி உள்ளோம், எங்களை யாரும் அடைத்து வைக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
 
ஆனால் சில எம்.எல்.ஏ.க்கள் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் உள்ளனர், அவர்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் தவிர வெளியாட்கள் இன்னும் நடசத்திர விடுதியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments