Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குப் பரவியது.
கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை விரைவில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குரங்கு இன்று சாலையில் கிடந்த மாஸ்கை எடுத்து, மனிதர்களைப்போல் முகத்தில் மாஸ்க் அணிந்துகொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், தனக்கும் கொரொனா வரக் கூடாது என மனிதர்களைப் பார்த்து அதேபோல் மாஸ்க் அணிய குரங்கு முயற்சிக்கிறதோ எனப் பலரும் கூறி வருகின்றனர்.