Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியபாண்டியன் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முனிசேகர்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (12:52 IST)
மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை, ராஜஸ்தானில் தவறுதலாக சுட்டுக்கொன்ற, சக இன்ஸ்பெக்டர் முனிசேகர் பெரிய பாண்டியன் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், பெரியபாண்டியனை சுட்டது 'சக ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியால்தான் என்று ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ்’ உறுதியாக தெரிவித்தார். இருந்தபோதிலும் பெரியபாண்டியனின் மனைவி, முனிசேகர் எனது கணவரின் நெருங்கிய நண்பர், அவர் தனது கணவரை சுட்டிருக்க வாய்ப்பில்லை எனக் கூறினார்.
இந்நிலையில் பெரியபாண்டியனின் 16-வது நாள் காரியத்திற்கு சென்ற முனிசேகர், அவரது மனைவியின் காலில் விழுந்து நடந்தவற்றைக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். கொள்ளையனை சுடும் போது தவறுதலாக, பெரியபாண்டியன் மீது பட்டு அவர் உயிரிழக்க நேரிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments