Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (12:36 IST)
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 50% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தது போலவே இந்த நான்கு தொகுதிகளில் இரண்டு தொகுதியில் பெண் வேட்பாளரை சீமான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் நான்கு வேட்பாளர்கள் குறித்த விபரம் பின்வருமாறு:
 
திருப்பரங்குன்றம் - ரா.ரேவதி
 
ஒட்டப்பிடாரம் - மு. அகல்யா 
 
சூலூர் - வெ.விஜயராகவன் 
 
அரவக்குறிச்சி - பா.க.செல்வம்
 
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மேலே உள்ள நால்வரும் இன்று அல்லது நாளை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments