Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 6 June 2025
webdunia

களைகட்டிய பாக்கெட் சாரயம்; விறகு கட்டையால் வெளுத்த பெண்கள்! – நாகையில் அதிரடி சம்பவம்!

Advertiesment
Tamilnadu
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (13:31 IST)
நாகப்பட்டிணத்தில் சட்டத்திற்கு புறம்பாக பாக்கெட் சாராயம் விற்ற கும்பலை கிராமத்து பெண்கள் விறகு கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பாக்கெட் சாராயங்களை கடத்தி வந்து நாகப்பட்டிண மாவட்ட எல்லை கிராமங்களில் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நேற்று கீள்வெளூர் ஆனைமங்கலம் பகுதியில் இளைஞர்கள் சிலர் முறைகேடாக பாக்கெட் சாரயத்தை காரைக்காலில் இருந்து கடத்தி விற்று வருவது அந்த பகுதியில் உள்ள கிராமத்தினருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக விறகு கட்டைகளோடு விரைந்த அந்த கிராமத்து பெண்கள் சாராயம் விற்ற இளைஞர்களை அடித்து விரட்டியுள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சாராயம் விற்ற நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்தது. கொரோனாவால் வேலை இல்லாமல் உள்ள சில இளைஞர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அங்கீகாரத்தை ரத்து பண்ணிடுவோம்! எச்சரிக்க விடுத்த ஏஐசிடிஐ – அதிர்ந்த அண்ணா பல்கலைகழகம்!