Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:43 IST)
புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது என அம்மாநில முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 350 மதுபான கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன என்றும் ஆறு மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது என்றும் கூறியிருந்தார்.
 
 மதுபான ஆலைகளுக்கு அரசு மேலும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன என்றும் இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் புதுச்சேரியில் சாராயக் கடல் ஓடும் என்றும் அவர் கூறினார் 
 
கோவில்கள், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள் அருகே இருக்கும் மதுபான கடைகளை உடனே மூட வேண்டும் என்றும் நீதிமன்றம் சென்றாவது மதுபான கடைகளை புதிதாக திறப்பதை தடுத்து நிறுத்துவோம் என்றும் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments