Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வுகள் முகமை.. கடைசி தேதி என்ன?

Siva
ஞாயிறு, 10 மார்ச் 2024 (11:21 IST)
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ஆம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது 
 
2024-25 கல்வி ஆண்டு நீட் தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 9ஆம் தேதி நள்ளிரவு 11:55 என்ன விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப தேதி மார்ச் 16ஆம் தேதி இரவு 10.50 மணி வரை நீட்டிக்கபடுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இரவு 11.50 மணி நீட் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நீட் தேர்வுக்கு விண்ணப்பதிவு மாணவர்கள் neet.nta.nic.in  என்ற இணையதளம் வழியாக மார்ச் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் https://nta.ac.in/ என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது neet@nta.ac.in என்ற இமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments