Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
திமுக தொண்டர்கள் மட்டுமே படிக்கும் ஒரு பத்திரிகைக்கு இத்தனை விழா தேவையா? என்று நெட்டிசன்கள் டுவிட்டரில் கலாய்த்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.
தமிழகத்தில் ஆட்சி அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றது, நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர், விவசாயிகள் போராட்டம் ஒருபுறம் நடந்து வருகிறது, குடிநீர் பிரச்சனையால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர்.
தமிழகத்தில் இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் ஆளும் கட்சி கண்டுகொள்ளாமல் மத்திய அரசுக்கு காவடி தூக்கி வருகிறது. சரி எதிர்க்கட்சியாவது ஆக்கபூர்வமாக குரல் கொடுக்கும் என்று பார்த்தால் திமுக தொண்டர்களை தவிர இப்படி ஒரு பத்திரிகை இருப்பது பலருக்கு தெரியாத ஒரு பத்திரிகையான முரசொலிக்கு அடுத்தடுத்து விழாக்கள் தேவையா? கூட்டணி பேச வேண்டும் என்றால் வைகோவை நேரடியாக அழைத்து பேச வேண்டியதுதானே! அதற்கு எதற்கு ஒரு விழா என்று நெட்டிசன்கள் மற்றும் மாணவர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இன்றைய இளையதலைமுறை நெட்டிசன்கள் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனிக்கின்றனர் என்பதற்கு இதுவொரு உதாரணம் ஆகும்