Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருகிறது ”பேய்ட்டி” புயல்? சென்னையை தாக்கும் என கணிப்பு

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (12:07 IST)
கடந்த மாதம் கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெய்யக்கூடும் என செய்திகள் தெரிவிக்கப்பட்டாலும் கடந்த 3 நாட்களாக வறண்ட வானிலையே காணப்படுகிறது.
 
கஜா புயலின் தாக்கத்தில் இருந்தே மக்கள் முழுதாக மீளாத நிலையில் அடுத்து ஒரு புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
அதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். 
 
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாம். ஆம், வருகிற 10 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் மாறி தமிழகம் - ஆந்திரா கடற்கரையை நோக்கி புயல் நகரும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 
முதலில் இந்த புயல் சென்னையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆந்திரா நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
 
அப்படி இந்த புயல் கணிப்பின்படி உருவாகினால், இதற்கு தாய்லாந்து பேய்ட்டி என பெயர் சூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments