Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது: அரசு அதிரடி அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:01 IST)
தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி கொண்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் என்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பேருந்து கூட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு 710 பேருந்துகளும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 160 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவரம் பகுதியில் உள்ள தென் மாவட்ட மக்களின் வசதிக்காக அங்கிருந்தே தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

எனவே இனிமேல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரு பேருந்து கூட கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments