Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த தேர்தலிலும் போட்டியில்லை: திவாகரன் அதிரடி

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (07:10 IST)
ஒருபக்கம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் அடுத்ததாக திருப்பரங்குன்றம் தொகுதியையும் கைப்பற்றும் முயற்சியில் இருக்கும் நிலையில் அவரது உறவினரான திவாகரன் இன்னொரு பக்கம் நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 
நேற்று தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திவாகரன், பதவியை பிடிப்பதற்காக தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றும், நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்றும் இருப்பினும் தனது கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் கூறினார்.
 
மேலும் சிலைக் கடத்தல் வழக்கு உட்பட அரசின் ஒவ்வொரு செயலும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த விஷயத்தில் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் குறினார். 
 
மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தன்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றும் விசாரணை ஆணையம் கேட்ட மற்ற கேள்விகளுக்கு தான் பதில் அளித்ததாகவும் திவாகரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

தமிழக மீனவர்கள் கைது.! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்துள்ளர்.

தமிழக முழுவதும் பத்து லட்சம் பண விதைகள் விதைக்கப்பட உள்ளது -அமைச்சர் கே.என்.நேரு!

இலங்கை அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க..! பிரதமர் மோடி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments