Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதிக்கு என்ன ஆச்சு?: பார்க்க யாரும் வர வேண்டாம் என மீண்டும் அறிவுறுத்தல்!

கருணாநிதிக்கு என்ன ஆச்சு?: பார்க்க யாரும் வர வேண்டாம் என மீண்டும் அறிவுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2017 (17:41 IST)
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க யாரும் வர வேண்டாம் என தலைமை கழகம் சார்பில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 
 
வருடம் தோறும் பொங்கல் பண்டிகை அன்று திமுகவினர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து செல்வர். தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் அன்று கருணாநிதி பத்து ரூபாய் அன்பளிப்பாக வழங்குவார். அதனை தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக திமுகவினர் பத்திரப்படுத்தி வைப்பர்.
 
இந்நிலையில் இந்த முறை திமுக தலைவர் கருணாநிதியை யாரும் சந்திக்க வரவேண்டாம் என கூறுயிருப்பது தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே யாரும் சந்திக்க வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளதா பேசப்படுகிறது.
 
கடந்த சில மாதங்களாக திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார் கருணாநிதி. ஆனாலும் அவரால் முன்பு போல இயங்க முடியவில்லை.
 
இதனால் மேலும் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மருத்துவர்கள் கவனமாக உள்ளனர். அவர்களது அறிவுறுத்தலின் பேரிலேயே கருணாநிதியை தொண்டர்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என தலைமை கழகம் அறிவுறித்தியுள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments