Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகுல் காந்தி இதை ஏன் புரிந்து கொள்ளவில்லை: நெட்டிசன்கள் கேள்வி!

ராகுல் காந்தி இதை ஏன் புரிந்து கொள்ளவில்லை: நெட்டிசன்கள் கேள்வி!
, வியாழன், 3 பிப்ரவரி 2022 (08:47 IST)
தமிழகத்தில் எந்த காலத்திலும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என்று கூறிய ராகுல் காந்திக்கு தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி செய்ய முடியாது என்பது புரியாதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் 
 
காமராஜர் ஆட்சி செய்த பிறகு காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஆட்சி இல்லாமல் உள்ளது. தன்னுடைய கட்சியை தமிழகத்தில் ஆட்சி புரிய வைப்பேன் என சவால் விடுவதை விட்டு விட்டு பாஜக ஆட்சிக்கு வராது என சவால் விடுவதுதான் ஒரு தலைவருக்கு அழகா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்
 
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது என்பதும் தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை என்றும் இதை தடுக்க ராகுல் காந்தியால் எந்த காலத்திலும் முடியாது என்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழர்கள் வாழும் புதுச்சேரியில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது: ராகுலுக்கு குஷ்பு பதிலடி!