Publish Date: Tue, 09 Mar 2021 (10:45 IST)
Updated Date: Tue, 09 Mar 2021 (12:05 IST)
துணை முதல்வர் ஓபிஎஸ் கேக் வெட்டி மகளிருக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதல்வர் ஓபிஎஸ் கேக் வெட்டி மகளிருக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு, ஜெயலலிதா ஆட்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் ஆண்களுக்கு நிகராக பெண்களை பொருளாதார ரீதியில் வளப்படுத்த எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.