Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகுதி நேர ஆசிரியர்கள் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (20:48 IST)
பகுதி நேர ஆசிரியர்கள் கைதை கண்டித்து கரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் - உலக ஆசிரியர் தினத்தில் மேற்கொண்ட கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்தனர்.
 
சம வேலைக்கு சம ஊதியம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சில தினங்களாக சென்னை டிபிஐ அலுவலகத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 
 
போராட்டம் தொடர்பாக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 'நிதிச் சுமை இருப்பதால் எதுவும் செய்ய முடியாது, கலைந்து செல்லுங்கள். எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள்' எனக் கூறியும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர்.
 
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். இந்த கவிதை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50 ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்ததை கண்டித்தும், உலக ஆசிரியர் தினத்தன்று கைது நடவடிக்கை மேற்கொண்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments