Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நர்சுகளை ரகசியமாக படம் பிடித்த நபர் – பொதுமக்கள் தர்ம அடி!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (11:21 IST)
நாகர்கோவில் அருகே நர்சுகள் உடை மாற்றுவதை படம்பிடித்த ஆசாமியை மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

நாகர்கோவில் அருகே ஆசாரிப்பாளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு பணிபுரியும் நர்சுகள் உடை மாற்றிக் கொள்வதற்காக ஓட்டு கட்டிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நர்சுகள் உடைமாற்றும் அறை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்றிருந்திருக்கிறார். பொதுமக்கள் அவரை அழைத்து விசாரிக்கையில் தனது மனைவி நர்ஸ் என்றும், அவருக்காக உடை மாற்றும் அறை அருகே காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அதை நம்பிய பொதுமக்கள் அங்கிருந்து சென்ற பிறகு செல்போன் கேமராவால் ஜன்னல் வழியாக நர்சுகள் உடை மாற்றுவதை படம் பிடித்துள்ளார். இதை கண்டு நர்ஸ் ஒருவர் அலறவும் ஓடி வந்த பொதுமக்கள் படம்பிடித்த ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பிறகு போலீஸிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீஸார் அதில் இருந்த வீடியோக்களை டெலிட் செய்து, அந்த நபரை சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments