Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு பின் திமுக, பாஜகவுடன் சேர்ந்துவிடும். டிடிவி தினகரன் எச்சரிக்கை

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (11:27 IST)
தேர்தல் ஆணையம் கொடுத்த பரிசுப்பெட்டி சின்னத்தை குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சென்ற சந்தோஷத்தில் டிடிவி தினகரன் நேற்று வேலூர் தொகுதியில்  போட்டியிடும் அமமுக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 
 
திமுக வேட்பாளரான தனது மகனை இந்த தொகுதிக்கு தத்து கொடுப்பதாக முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் சொல்கிறார். மக்களாகிய நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 7 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லை. திமுக ஆட்சியில் இல்லாத போதே பிரியாணி கடை, பியூட்டி பார்லர் ஆகியவற்றை அடித்து நொறுக்குகின்றனர். 
 
ராகுல் காந்திக்கு பிரதமராக முதிர்ச்சியில்லை என்று கூறிய ஸ்டாலின் தற்போது ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று பேசுகிறார். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இங்கு திமுக வெற்றி பெற்று, மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் திமுகவினர் மோடி பக்கம் சென்றுவிடுவார்கள். அவர்கள் பதவிக்காக எதையும் செய்வார்கள். அதனால் தான் 10 ஆண்டுகள் அட்டை போல் காங்கிரசை உறிஞ்சிக்கொண்டிருந்தனர். அப்போது நடந்த இலங்கை படுகொலையை கூட அவர்கள் வாய் திறந்து ஏன் என கேட்கவில்லை. ஆகவே மக்களுக்கு நன்மை செய்யும் மாநில கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments