Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்தமாகக் குறைந்து படிப்படியாக ஏறும் பெட்ரோல் விலை!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (11:51 IST)
தமிழநாட்டில் இன்று பெட்ரோல் 22 காசுகளும் டீசல் 31 காசுகளும் உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 90 ரூபாயைத் நெருங்கி விற்கப்பட்டு மக்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கி வருகிறது. கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் பொருட்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பெட்ரோல், டீசல் விலையிலிருந்து லிட்டருக்கு ஒரு ரூபாயை மத்திய அரசு கலால் வரியிலிருந்து குறைத்துக் கொள்ளும் எனவும் எண்ணெய் நிறுவனங்களை அதன் உற்பத்தி செலவலிருந்து லிட்டருக்கு 1 ரூபாயைக் குறைத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. இதனால் மொத்தமாக பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாய் குறைந்துள்ளது. மேலும் மாநில அரசுகளையும் தங்கள் வரியைக் குறைத்துக் கொள்ள வலியுறுத்தினார்.

ஆனாலும் அதனால் மக்களுக்கு பெரிய அளவில் பலனில்லை என்ற சூழ்நிலையே நிலவி வருகிறது. மொத்தமாகக் குறைந்த 2.50 ரூபாய் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் பெட்ரோல் விலை 22 காசுகளும் டீசல் 31 காசுகளும் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை 85.26 ரூ ஆகவும், டீசல் விலை 78.04ரூ ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இப்படியே உயர்ந்து கொண்டே போனால் பத்தே நாட்களில் பெட்ரோல் மீண்டும் பழைய விலைக்கே வந்துவிடும். அதனால் விலைக்குறைத்தும் பயனில்லை என வாகன ஓட்டிகள் தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments