Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்ப்ரைஸுக்கு காத்திருக்கோம்: தேமுதிக கூட்டணி குறித்து பியூஸ் கோயல்

Advertiesment
தேமுதிக
, புதன், 6 மார்ச் 2019 (11:40 IST)
தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் சர்ப்ரைஸுக்கு காத்திருக்கோம் என கூறியுள்ளார்.
 
பெரிய அளவு வாக்கு வங்கி இல்லாத தேமுதிக, ஆரம்பம் முதலே கொஞ்சம் ஓவராய் தான் போய்க்கொண்டிருந்தார்கள். குறிப்பாக அதிமுக பாமகவிற்கு 7 சீட் கொடுத்த பின்னர், தங்களுக்கு 7 அல்லது அதற்கு மேலான சீட்டுகளை கொடுத்தால் தான் கூட்டணி என அதிமுகவிடம் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டது தேமுதிக.
 
இதையடுத்து இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த திமுக, தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கும் தேமுதிக பிடிகொடுக்கவில்லை. இதனால் திமுக தேமுதிகவை கழற்றிவிட்டது.
தேமுதிக
 
இந்நிலையில் நேற்றுமுன் தினம் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதால் தேமுதிகவின் கூட்டணி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
 
இன்று அதிமுக சார்பில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க இருக்க்கும் நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளால் அடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றில் விஜயகாந்த் புகைப்படம் இல்லை. அவரை தவிர மற்ற அனைத்து கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இருக்கின்றது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்று கூறப்பட்டது.
தேமுதிக

 
 
இந்நிலையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் தேமுதிக உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு நேரடியாக பதிலளிக்காத அவர், சர்ப்ரைஸுக்கு காத்திருக்கோம் என கூறினார். அதிமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்குகிறதோ அதனை பெற்றுக்கொண்டால் நல்லது, இல்லையேல் திமுக கழற்றிவிட்டது போல அதிமுகவும் தேமுதிகவை கழற்றிவிட அதிகம் வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோபேக் மோடி பாகிஸ்தான் சதி – ஹெச் ராஜாவின் அட்மின் கருத்து !