Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயித்த பின்னர் அடாவடியை ஆரம்பித்த தினகரன் ஆதரவாளர்கள்: ஆர்.கே.நகர் மக்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (05:00 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் கடைசி நாள் பிரச்சாரத்தின்போது தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி அதிகமாக இருந்ததால் ஒருசில வாக்காளர்களுக்கு ரூ.20 டோக்கன் கொடுத்துவிட்டு, அந்த டோக்கனுக்கு தேர்தல் முடிந்தவுடன் பணம் தருவதாக தினகரன் ஆதரவாளர்கள் கூறியதாக தெரிகிறது

இந்த நிலையில் தேர்தல் முடிந்து முடிவும் வந்துவிட்ட நிலையில் சொன்னபடி சிலருக்கு ரூ.20 டோக்கனுக்கு பணம் தரவில்லையாம். டோக்கனை கொடுத்து பணம் கேட்டவர்களை தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி  ஆர்.கே.நகர் தொகுதி மீனாம்பாள் நகர் பகுதியில் உள்ள தினகரன் ஆதரவாளரான ஜான்பீட்டர் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு வந்து 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பணம் கேட்ட மூன்று பேர்களை தாக்கியதாகவும்  கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், தினகரன் ஆதரவாளர்கள் ஜான்பீட்டர் உள்பட நான்கு பேர்களை கைது செய்துள்ளனர். தினகரன் ஆதரவாளர்கள் வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதி அளித்த பணத்தை தராததால் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments