Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர், வழக்கறிஞருடன் ஆஜரான அமைச்சர் பொன்முடி.. அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (17:45 IST)
அமைச்சர் பொன்முடி இன்று மாலை மகன் கௌதம் சிகாமணி உடன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் ஆஜரானதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு மருத்துவர் உடன் ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று காலை முதல் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்த நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை விசாரணை நடைபெற்றது
 
விசாரணைக்கு பின்னர் அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து சற்றுமுன் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  
 
இன்று சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments