Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இருளில் மூழ்கிய சென்னை!

Webdunia
புதன், 17 மே 2017 (04:35 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு மத்திய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலுவைத்தொகை தராததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அன்றைய தினம் இரவு முழுவதும் சென்னை நகரமே இருளில் மூழ்கியது.



 


இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு திடீரென சென்னையில் மின்சாரம் தடை ஏற்பட்டது. இதனால் சென்னையின் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், ராயப்பேட்டை, வியாசர்பாடி, கொளத்தூர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர் என சென்னை மாநகரின் 95 சதவீத பகுதிகள் இருளில் மூழ்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சென்னை வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால் சென்னையில் மின்சாரம் தடை ஏற்பட்டதாகவும், அந்த பழுது உடனடியாக சரிசெய்யப்பட்டு படிப்படியாக மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments