Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 19 May 2025
webdunia

தமிழகம் சிறந்த மாநிலம்.. ஆனா ஊழல்வாதிகள் கைகளில்! - விஜய் வந்து விடுவிப்பார்! - பிரஷாந்த் கிஷோர்!

Advertiesment
Prasanth Kishore

Prasanth Karthick

, புதன், 26 பிப்ரவரி 2025 (12:34 IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் பேசிய அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விஜய் விடுவிப்பார் என பேசியுள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் பேசிய பிரஷாந்த் கிஷோர் “இந்தியா முழுவதும் சிறப்பான மாநில வளர்ச்சிக்கு உதாரணமாக குஜராத் மாடலை சொல்வார்கள். ஆனால் கட்டமைப்பில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான். ஆனால் இங்குள்ள ஊழல் அரசியல்வாதிகளிடம் அது சிக்கிக் கொண்டிருக்கிறது.

 

தமிழ்நாட்டை காக்க CCD என்ற Corruption, Communalism, Dynasty ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். ஊழல் அரசியல்வாதிகள் வெளியேற்றப்பட வேண்டும், வகுப்புவாதம் ஒழிக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட குடும்பம் அரசாள்வது நிறுத்தப்பட வேண்டும். 

Prasanth Kishore

சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டில் பேமஸ். ஆனால் அவரது மகன் கிரிக்கெட்டுக்கு வரவில்லை. அதனால்தான் நமக்கு டெண்டுல்கர், தோனி போன்ற சிறந்த வீரர்கள் கிடைத்தார்கள். தோனிக்கு தமிழ்நாட்டில்தான் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். அதுபோல அரசியலிலும் குடும்ப அரசியல் இல்லாமல் ஆக வேண்டும்” என பேசியுள்ளார்.

 

மேலும் ”இந்த ஆண்டு இந்த விழாவில் பேசும் நான் அடுத்த ஆண்டு தவெக கட்சியின் தேர்தல் வெற்றிக்கு பிறகு உங்களுடன் தமிழில் பேசுவேன். அடுத்த வருடம் தல தோனி கோப்பை வெல்வார் என்றால் உங்கள் தளபதி ஆட்சியை வெல்வார். இன்னும் 100 நாட்களில் தவெகவில் நீங்கள் அனைவரும் குறைந்தது இரண்டு பேரையாவது சேர்க்க வேண்டும்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியை அழித்தால் வடமொழிக்காரர்கள் என்ன செய்வார்கள்? பாஜகவினர் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த பதில்!