Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணும் நெருப்புபோல் இருந்தால் 'மீ டு' எப்படி வரும்: பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (13:28 IST)
'மீ டு' இயக்கம் மூலம் இந்தியா முழுவதும் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்து வருகிறார்கள். பல ஆண்டுகாலமாக வெளியில் சொல்லாமல் இருந்த பெண்கள், 'மீ டு' இயக்கம் மூலம் தைரியமாக தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

 
#MeToo ஹேஸ்டாக் மூலம் நடிகை தனுஸ்ரீ தத்தா, கங்கனா ரணாவத், சின்மயி, லீனா மணிமேகலை, சுருதி ஹரிகரன் உள்பட பலர் பாலியல் புகார் எழுப்பிவருகிறார்கள். இதற்கு ஆதரவும் எதிர்ப்பு இருக்கிறது. இந்த விவகாரத்தில் நானே படேகர், அர்ஜுன், வைரமுத்து உள்பட பல பெரும் தலைகள் சிக்கியுள்ளனர்.
 
சிலர் 'மீ டு' இயக்கம் மூலம் ஆதாரம் இல்லாமல் அவதூறாக குற்றம்சாட்டுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், தேமுதிக பொருளாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற பிரேமலதா விஜயகாந்த், ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழையும். எனவே, ஒவ்வொரு பெண்ணும் நெருப்புபோல் இருந்தால் #MeToo எப்படி வரும்? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்