Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலைக்கு சென்ற புதுவை இளைஞருக்கு ரூ.20 கோடி பரிசு.. தேடி வந்த அதிர்ஷ்டம்..!

Mahendran
சனி, 3 பிப்ரவரி 2024 (13:03 IST)
புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சபரிமலைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 20 கோடி ரூபாய் பரிசு விழுந்ததை அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று உள்ளார்

புதுச்சேரியை  சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் சபரிமலைக்கு சென்றார். அவர் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது லாட்டரி கடை ஒன்றை பார்த்து அங்கு கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார்
 
இதனை அடுத்து அவர் வீட்டுக்கு வந்த நிலையில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ஆன 20 கோடி ரூபாய் விழுந்திருப்பதாக தகவல் வெளியானது.  இதனை அடுத்து அவர் இன்ப அதிர்ச்சியடைந்து உடனடியாக லாட்டரி சீட்டு கடையை தொடர்பு கொண்டு தனக்கு பரிசு விழுந்ததை உறுதி செய்துள்ளதை அடுத்து அவர் நேரில் சென்று பரிசை பெறுவதற்காக சென்றார்

அப்போது அவரை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் குவிந்த நிலையில் தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டு ’தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த பணத்தை வைத்து குடும்பத்தினருக்கு தேவையானதை வாங்கி கொடுப்பேன் என்றும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வேன் என்றும் கூறியுள்ளார்

சபரிமலைக்கு சாமி கும்பிட சென்றவருக்கு 20 கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைத்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments