Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலாண்டு தேர்வு நடத்துவது எப்போது? செங்கோட்டையன் பதில்!!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (12:43 IST)
கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளிகள் திறக்கப் படவில்லை. அதோடு பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது.  
 
இந்நிலையில் கடந்த ஜூன் மாதமே இந்த கல்வி ஆண்டுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை.  
 
ஏற்கனவே மூன்று மாதங்கள் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஆகி விட்ட நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாத நிலை உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் மாணவ்ர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments