Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப் கிடைச்சா நுழைய பாக்குறாங்க.. அது முடியாது! – ஆர்.பி.உதயகுமார் வார்னிங்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (10:43 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவிலை கிடைக்கும் இடைவெளியில் உள்ளே நுழைய சிலர் முயற்சிப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? சசிகலா அதிமுகவில் இணைவாரா? போன்ற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் உலா வர தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சசிகலா விடுதலை குறித்து அமமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சசிகலா விடுதலையாகி வந்ததும் அதிமுக – அமமுகவை இணைப்பார் என்றும், பாஜகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அமமுக வட்டாரத்தில் பலத்தரப்பட்ட தகவல்கள் உலா வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசிய அமைச்சர் ஆர்பி உதயகுமார் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும் என கூறியுள்ளார். மேலும் யார் பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாக பேசிய அவர் “அதிமுகவில் இடைவெளி உருவானால் உள்ளே புகுந்து விடலாம் என சிலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் நிறைவேறாது. “ஊரெங்கும் ஒரே பேச்சு, 2021ல் அதிமுக ஆட்சி” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments