Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை அலுவலகத்தை மூட ரஜினி திடீர் முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (22:20 IST)
ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில் விரைவில் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தனது கட்சி அறிவிப்பை  வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை அலுவலகமாக சென்னையில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தின் ஒரு பகுதி செயல்பட்டு வருகிறார். இங்குதான் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். உறுப்பினர் சேர்க்கைகள், ஆலோசனைகள் உள்ளிட்ட வேலைகள் இந்த அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனம் குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருவதாக வட மாநிலத்தில் படப்பிடிப்பில் உள்ள ரஜினியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் இதனால் அதிருப்தியான ரஜினிகாந்த், தலைமை  தலைமை அலுவலகத்தை இழுத்து மூட உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினி சென்னை திரும்பியதும் பிரச்சனைகள் பேசி சரிசெய்த பின்னரே தலைமை அலுவலகம் திறக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்