Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாத்தான்குளம் சம்பவம்: போன் போட்டு ரஜினி இரங்கல்!!

Advertiesment
ரஜினி
, ஞாயிறு, 28 ஜூன் 2020 (15:05 IST)
சாத்தான்குளத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல். 
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    
 
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று வணிகர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும், சாத்தான்குளம் தந்தை மகனின் மரணத்தில் நீதி வேண்டும் என்று திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.    
 
இந்த சம்பவம் குறித்து திரைப்பிரபலங்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து நீதி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கராத்தே தியாகராஜன் தனது டிவிட்டர் பதிவில், சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை - மகன் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது காவல்துறைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் சாத்தான்குளம் சம்பவத்தில் மவுனம் காப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலாக இந்த பதிவு இருக்கும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபத்தமாய் பேசும் கடம்பூரார்: போலீஸுக்கு வக்காலத்தா??