Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரண்மனையில் பிறந்த கமல்ஹாசனுக்கு மன்னர் கூறிய வாழ்த்து

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (23:15 IST)
நடிகர் கமல்ஹாசன் பரமக்குடியில் பிறந்து வளர்ந்தவர் என்றுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் அரண்மனையில் பிறந்தவர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கமல்ஹாசன் பிறந்த அன்று கனமழை பெய்ததால் அவரது தாயாரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தில் கமல்ஹாசனின் தந்தை இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் வழக்கறிஞராக பணிபுரிந்ததால் மன்னரிடம் அனுமதியுடன் அரண்மனை வைத்தியரால் கமல் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

சேதுபதி மன்னரின் அரண்மனையில் பிறந்ததால் கமல் சிறுவயதில் அடிக்கடி அரண்மனைக்கு சென்று வருவதுண்டு என்றும் தற்போது 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவர் அந்த அரண்மனைக்கு சென்று மன்னரிடம் தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து பெற செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவலை சேதுபதி மன்னரின் வாரிசுகள் உறுதி செய்துள்ளனர். மன்னர் மற்றும் ராணியின் ஆசியை பெறவுள்ள கமல்ஹாசன், அரியணையிலும் ஏறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments