Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் முதல் முறையாக ரேபிட் சோதனை! எங்கு தெரியுமா?

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (15:44 IST)
தமிழகத்தில் சேலத்தில் முதல் முறையாக கொரோனா ரேபிட் சோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1323 ஆக உள்ளது. இந்நிலையில் சீனாவிடம் இருந்து மத்திய அரசு 24,000 கொரோனா ரேபிட் டெஸ்ட் கிட்களை அனுப்பியுள்ளது. இந்த கருவிகள் சேலம், சென்னை, கோவை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு நேற்றிரவே அனுப்பி வைக்கப்பட்டு இன்று காலை அனைத்து மருத்துவமனைகளுக்கும் வந்தடைந்தன.

இந்நிலையில் சேலத்தில் முதல்முதலாக இந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலம் சோதனை செய்யப்பட்டு 30 நிமிடத்தில் முடிவு வெளியாகியுள்ளது. 18 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுபோலவே சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளிலும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments