Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல இடங்களில் மறுவாக்குப் பதிவு! – இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (09:29 IST)
தமிழகத்தில் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் காலை தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வமாக வந்து வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

கடந்த முதற்கட்ட தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் சின்னம் இடம் பெறாமல் இருந்தது, சின்னம் மாறி இருந்தது, வாக்குசீட்டுகள் வார்டு மாறி வந்தது, ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டிருந்தது என பல்வேறு பிரச்சினைகளால் பல இடங்களில் தேர்தல் தடைப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தடைப்பட்ட இடங்களில் இன்று மீண்டும் மறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், தருமபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஒரு சில வார்டுகளில் மட்டும் மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments