Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூவத்தூரில் செய்தியாளர்கள் சாலை மறியல் போராட்டம்

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (18:21 IST)
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இதனை கண்டித்து செய்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.


 

 
கூவத்தூரில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்து மர்ம நபர்கள் மோதலில் ஈடுப்பட்டனர். செய்தியாளர்களுக்கு ஆதரவாக கூவத்தூர் மக்கள் மர்ம நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்த மர்ம நபர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர்.
 
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்த அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரம் முன்பே மர்ம நபர்கள் சிலர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் அப்பகுதியில் செல்லும் அனைவரையும் சோதனை மேற்கொண்டே பிறகே அனுமதித்து வருகின்றனர். செய்தியாளர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக உள்ளே நடப்பதை காட்சிப்படுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
 
செய்தியாளர்களுக்கு அவ்வப்போது பேட்டியளித்து வரும் ஒரு சில எம்.எல்.ஏ.க்களும் 2 கி.மீ தூரம் வந்துதான் பேட்டி அளித்து வருகின்றனர். மேலும் இதனால் அப்பகுதி பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் செய்தியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் சசிகலா அலோசனை கூட்டம் முடித்து விட்டு வெளியே வர சிரமம் ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 நாட்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்ட தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்? அன்புமணி

சென்னையில் 100° F வெயில் சுட்டெரிக்கும்! வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மூடி விடலாமே? உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்.!!

அரசு பள்ளியாக மாற்றப்பட்ட அம்மா உணவகம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டார்கள்.! முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆதங்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments