Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

100 ஆண்டுகள் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

100 ஆண்டுகள் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்:  வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

Mahendran

, வெள்ளி, 5 ஜூலை 2024 (10:41 IST)
உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டதாக தகவல்வெளியாகியுள்ளது.
 
குத்தகை காலம் 1978 உடன் முடிந்த நிலையில் அதன்பிறகு குத்தகை தொகையை செலுத்தாமல் மைதானம் இயங்கி வந்துள்ளதாகவும்,  அரசு நோட்டீஸ் அளித்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து 2006ல் வருவாய்த்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டதாகவும் தெரிகிறது.
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2019ல் குதிரை பந்தய மைதானத்தை மீட்க உத்தரவிட்டது.  இதை அடுத்து உதகை கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் அதிகாரிகள் 52.4 ஏக்கர் மைதானத்தை மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!