Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் ரூ.20 லட்சம் பறிமுதல்: தினகரன் ஆதரவாளரிடம் விசாரணை

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (12:23 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவும், தினகரன் அணியினர்களும் வாக்காளர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.6000 வரை பணம் கொடுத்து வருவதாக புகார் கூறப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன்னர் டிடிவி தினகரன் ஆதரவாளரிடமிருந்து 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் செல்வியிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த பணமா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஆனால் 'எங்களின் ஆதரவாளரிடம் ரூ.20 லட்சம் பிடிப்பட்டது என்பது பொய்' என தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இந்த தகவலை மறுத்துள்ளார். இந்த நிலையில் 'நேற்று மட்டும் அதிமுக மற்றும் தினகரன் அணியால் ரூ.100 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையும் திட்டமிட்டு இதற்கு உடந்தையாக இருப்பதாகவும், பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் கண்டும் காணாமல் இருப்பதாகவும் ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments